×

ஊராட்சி தலைவர் மீது நிதி முறைகேடு புகார்: வட்டாட்சியர் விசாரணை

உடுமலை, ஏப்.13: உடுமலை அருகே உள்ள போடிப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளார். இவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் சில மன்ற உறுப்பினர்கள் நிதி முறைகேடு புகார் அளித்தனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் கண்ணாமணி நேற்று போடிப்பட்டி வந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் நேரில் விசாரணை நடத்தி, கருத்துகளை கேட்டார். மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வரவில்லை. இதுகுறித்து வட்டாட்சியர் கண்ணாமணி கூறுகையில், “புகார் தொடர்பாக ஆட்சியர் உத்தரவுப்படி மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை பதிவு செய்து அனுப்ப வந்துள்ளேன். வரும் 24ம் தேதி மீண்டும் கருத்து கேட்பு நடைபெறும்” என்றார். இதையொட்டி, உடுமலை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்ஐ முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஊராட்சி தலைவர் மீது நிதி முறைகேடு புகார்: வட்டாட்சியர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Bodipatti ,Panchayat Council ,President ,Dinakaran ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்