×

மோசடி செய்த வாலிபர் கைது

தேவகோட்டை, ஏப்.13: தேவகோட்டை தாலுகா வெங்களூர் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி(80). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று பணம் எடுக்க தேவகோட்டை பஸ் நிலைய வீதி ஏடிஎம்மிற்கு வந்துள்ளார். அப்போது அருகில் நின்றிருந்த வாலிபர் பணம் எடுத்து தருவதாக சொல்லி ஏடிஎம் கார்டை வாங்கி ரூ.9500 எடுத்து அதில் 2 ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு நழுவ முயன்றார். அப்போது அந்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து தேவகோட்டை டவுன் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலை நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் மகன் காட் ஜான்(21) எனத் தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

The post மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Devakotta ,Ramasamy ,Devagotta taluka Vengalore Chatamangalam ,
× RELATED கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது