×

இரு வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை

மதுரை, ஏப். 13:மதுரை தெற்குவெளி வீதி, மீனா லூர்தீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சரவண தீபக்(21). இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து, சரவண தீபக்கின் தாயார் வசந்தி தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ேபாலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், மதுரை கே.கே.நகர், மல்லிகை குடியிருப்பில் வசித்து வருபவர் வீரையா. இவரது மகன் உதயபாரத்(21). இவர், நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, இவரது தாயார் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து, உதயபாரத்தின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post இரு வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ganesan ,Meena Lurdeen Palliwasal Street, South West Road, Madurai ,Saravana Deepak ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...