×

காரில் போதைபொருள் கடத்திய 3 பேர் கைது

சென்னை, ஏப். 13: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மற்றும் பத்மா வாத்தியார் தெரு சந்திப்பு அருகே ராயப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை, வழிமறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் இருந்த 3 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது 15 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போதை பொருள் கடத்தி வந்த புதுப்பேட்டை சவரி முத்து தெருவை சேர்ந்த முகமது அப்சர் (20), முகமது ஷமில் (18), ராமநாதபுரம் மாவட்டம் பள்ளிவாசல் முதல் ெதருவை சேர்ந்த அராபத் அலி (25) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

The post காரில் போதைபொருள் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayapetta ,Peters Road ,Padma Vathiyar Street ,Chennai Rayapetta… ,Dinakaran ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்