×

தனிக்குடித்தனத்துக்கு கணவர் மறுப்பு; ஐடி பெண் ஊழியர் தற்கொலை

தாம்பரம்: சேலம் மாவட்டம், பிரமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்ட்ரெல்லா (21). இவர், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் நவீன்குமார், சேலத்தில் கட்டிட கூலிவேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குரோம்பேட்டையில் தனது தோழிகளுடன் தங்கி வேலைக்கு சென்று வந்த சின்ட்ரெல்லா, பின்னர் அதே பகுதியில் வாடகைக்கு தனியே வீடு பார்த்து குடியேறியுள்ளார். இதைத் தொடர்ந்து, தனது கணவரை குழந்தையுடன் இங்கு தனிக்குடித்தனத்துக்கு வரும்படி கடந்த சில மாதங்களாக சின்ட்ரெல்லா வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு கணவர் நவீன்குமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சின்ட்ரெல்லாவின் வீட்டுக்கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியின் கொக்கியில் சின்ட்ரெல்லா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் குரோம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சின்ட்ரெல்லாவின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தன்னுடன் தனிக்குடித்தனம் நடத்த கணவர் மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சலில் சின்ட்ரெல்லா தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post தனிக்குடித்தனத்துக்கு கணவர் மறுப்பு; ஐடி பெண் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Cinderella ,Pramichipalayam, Salem district ,Sriperumbudur ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!