×

கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு

சென்னை: கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது. மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.மகேஸ்வரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கலாஷேத்ரா முதல்வர், இயக்குனர், துணை இயக்குனர்கள் உள்பட 6 பேரிடம் நேற்று விசாரணை நடத்தினர். கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ளார்கள்.

The post கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Khalashetra ,Chennai ,
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை