×

ஐதராபாத்தில் ஐ.பி.எல் போட்டியின் போது பணம் மற்றும் பொருட்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது..!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஐ.பி.எல் போட்டியின் போது பணம் மற்றும் பொருட்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். 10 பேரிடம் ரூ.60 லட்சம் ரொக்க பணம் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கிரிக்கெட் போட்டியின் போது பணம் மற்றும் பொருட்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பது தண்டனை குற்றமாகும். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவில் ஐ.பி.எல் லீக் ஆட்டம் நடைபெற்றது. அன்றையதினம் லக்னோ மற்றும் ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணிகள் இடையிலான போட்டியானது நடைபெற்றது.

போட்டி நடைபெற்ற திங்கட்கிழமை அன்று ஐதராபாத்தில் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஐதராபாத் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய சாய்அனுராக் காலனியில் இருக்கக்கூடிய வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காலனியில் ஐ.பி.எல் சூதாட்டம் பெரிதளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 10பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த 10 பேரிடம் ரூ.60 லட்சத்து 39ஆயிரம் ரொக்கபணம் ரூ.5.86 லட்சம் வங்கி டெபாசிட், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்கள் செல்போன்,லேப்டாப், டிவி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ஐ.பி.எல் சூதாட்டம் நடைபெறுவதற்கு முக்கிய நபராக இருந்த பாண்டு என்பவர் தலைமறைவாகி இருக்கிறார். அவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அடுத்தடுத்த போட்டியில் இந்த சூதாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்கும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

The post ஐதராபாத்தில் ஐ.பி.எல் போட்டியின் போது பணம் மற்றும் பொருட்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : I.A. ,Hyderabad GP ,Hyderabad ,GP ,GI ,UN ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...