×

தாந்தோணிமலை காமராஜபுரம் நுழைவு வாயில் பகுதியில் நடக்கும் கழிவு நீரோடை பணி: கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு

கரூர், ஏப். 12: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை காமராஜபுரம் பகுதியில் இருந்து தென்றல் நகர், முத்துலாடம்பட்டி, கணபதிபாளையம், ஏமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் செல்கிறது. காமராஜபுரம் சாலையின் நுழைவு பாதையின் அருகே சாக்கடை வடிகால் சீரமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த பகுதியில் இருந்து கரூர், கருப்பக்கவுண்டன்புதூர், திருச்சி பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து. அனைத்து வாகனங்களும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாந்தோணிமலை காமராஜபுரம் நுழைவு வாயில் பகுதியில் நடக்கும் கழிவு நீரோடை பணி: கலெக்டர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dandonimalai Kamarajapuram ,Prabhu Shankar ,Karur ,Karur Municipal Corporation ,Theral Nagar ,Muthuladampatti ,Ganapathipalayam ,Emur ,Thanthonimalai Kamarajapuram ,Collector ,Dinakaran ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...