×

சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம்; ஆரணியில் கைத்தறி பட்டு பூங்கா: அமைச்சர் காந்தி அறிவிப்பு

சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் காந்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

கைத்தறி:

  • கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு கைத்தறி பட்டுப் பூங்கா ஆரணியில் அமைக்கப்படும்.
  • இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ140 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.
  • சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் சந்தா செலுத்தப்பட வேண்டிய கால அளவினை 25 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
  • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ2 ஆயிரத்தில் இருந்து ரூ5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ263.90 லட்சம் மதிப்பில் 3,006 தறிகள், உபகரணங்கள் வழங்குதல் மற்றும் 56 நெசவாளர்களுக்கு ரூ67.20 லட்சத்தில் தறிக்கூடங்கள் அமைத்து தரப்படும்.
  • ‘கைத்தறி ரகங்கள் பிரபலப்படுத்தும் திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தில் தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் தொடங்கப்படும்.
  • கைத்தறி ரகங்களை காட்சிப்படுத்த 4 மெட்ரோ நகரங்களில் ’வாங்குவோர் விற்போர் சந்திப்பு’ நடத்தப்படும்.
  • கரூர் சாயச்சாலையில், ரூ20.40 லட்சத்தில் சீஸ் வடிவ நூல் சாயமிடும் இயந்திரம் நிறுவப்படும்.
  • உபபொருட்கள் விற்பனையகம் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ 75 லட்சத்தில் சென்னையில் அமைக்கப்படும்.

துணிநூல் துறை:

  • அனைத்து ஜவுளிப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த மாபெரும் ஜவுளி நகரம் பொது-தனியார் கூட்டாண்மையின் அடிப்படையில் சென்னையில் பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.
  • தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் உதவிகள் வழங்கிட துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரத்யேக ’ஜவுளித்தொழில் ஊக்குவிப்பு பிரிவு’ அமைக்கப்படும்.

The post சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம்; ஆரணியில் கைத்தறி பட்டு பூங்கா: அமைச்சர் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Handloom Silk Park ,Arani ,Minister ,Gandhi ,Assembly ,Dinakaran ,
× RELATED மாணவியை சென்னைக்கு கடத்தி பலாத்காரம்: வாலிபர் கைது