×

சேலியம்பேடு ஊராட்சியில் மறைந்த நல்லாசிரியரின் படத்திறப்பு விழா: மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

பொன்னேரி: சேலியம்பேடு ஊராட்சியில் மறைந்த நல்லாசிரியரின் படத்தை மாவட்ட கல்வி அலுவலர் திறந்து வைத்தார். மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேலியம்பேடு ஊராட்சியில், பள்ளிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளியில் ஆ.பாலகிருஷ்ணன் தலைமை ஆசிரியராக பணியாற்றி இறந்தார். இவரின் உருவப்பட திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இவ்விழாவிற்கு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சண்முகம் தலைமை தாங்கினார். பட்டதாரி சங்க தலைவர் தலைமையாசிரியர் உதயகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஏகாம்பரம், ரவி ஆகியோர் அனைவரையும் வரவேற்றார். பள்ளிபாளையம் மணி செட்டியார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கற்பகம் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைத்து நல்லாசிரியர் விருது பெற்ற பாலசுப்பிரமணியத்தைப் பற்றி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜ்குமார், நளினி, கௌரி, ஆசிரியர் பெருமக்கள், கிராம பொதுமக்கள், நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் மாங்கோடு மோகன், தேவம்பட்டு ரவி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, உருவப்படத்தை பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் ஊர்வலமாக மேடைக்கு கொண்டு வந்தனர்.

The post சேலியம்பேடு ஊராட்சியில் மறைந்த நல்லாசிரியரின் படத்திறப்பு விழா: மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nallasaytha ,Seliyambedu panchayat ,Ponneri ,District Education Officer ,Seliyambedu ,Meenjoor Union… ,Nallasayha ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்