×

மகாராஷ்டிராவில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

புனே: மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் அந்த நபரின் மனைவி போலீசாரிடம், கணவர் குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுவதாகவும் அவரை மன்னித்துவிடும்படியும் கெஞ்சியுள்ளார். இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்த ராஜேஷ் அக்வானே(42) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகின்றர்.

The post மகாராஷ்டிராவில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Maharashtra ,Pune ,Dinakaran ,
× RELATED பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலே மனுத்தாக்கல்