×

இரு வேறு இடங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்: 12 கிலோ கஞ்சா 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

சென்னை: நந்தம்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து மொத்தம் 11.2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (10.04.2023) காலை, நந்தம்பாக்கம், ஆர்மி மைதானம் டபுள் வாட்டர் டேங்க பகுதியில் கண்காணித்து, அங்கு நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்ததும், 2 நபர்களும் திரிபுரா மாநிலத்திலிருந்து கஞ்சா எடுத்து வந்ததும் தெரியவந்தது.

அதன் பேரில் மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 1.கபிர் உசேன், 2.இசாத் அகமது ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல, J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (10.04.2023) துரைப்பாக்கம், பாண்டியன் நகர் பார்க் பின்புறம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த அஜய் (எ) ரீட்டா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மேற்படி 3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

The post இரு வேறு இடங்களில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்: 12 கிலோ கஞ்சா 1 இருசக்கர வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nanambakkam ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...