×

ஐபிஎல் போட்டியை காண பாஸ்; எஸ்.பி. வேலுமணி கோரிக்கைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை!

சென்னை: ஐபிஎல் போட்டியை காண எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டுமென பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய தருமபுரி பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை.

ஆனால், தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு நேர் மாறாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ.-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கு ஐபிஎல் பாஸ் வழஙக்ப்பட்டது. ஐபிஎல் போட்டியை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அதிமுகவுக்கு பாஸ் கிடைக்கவில்லை. அதோடு தங்களுக்கு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். விளையாட்டுத்துறை அமைச்சர் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்க்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; ஐ.பி.எல். போட்டியை நடத்துவது உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான். நீங்கள் அவரிடம் சொல்லி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் 5 டிக்கெட் வாங்கிக்கொடுத்தால் போதும், காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம். ஐ.பி.எல் போட்டிகளை பார்க்க பாஸ் கேட்ட எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

The post ஐபிஎல் போட்டியை காண பாஸ்; எஸ்.பி. வேலுமணி கோரிக்கைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை! appeared first on Dinakaran.

Tags : IPL ,S. GP ,minister ,udayanidhi stalin ,veleni ,Chennai ,SF ,GP ,
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி