×

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடைசெய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ வெங்கடேசுவரன் கோரிக்கை

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதில் பேசிய பாமகவை சேர்ந்த தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஐபிஎல் தொடரில் தமிழகம் சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் என விளையாடி வரும் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். தமிழக வீரர்களை ஒதுக்கிவிட்டு, சுய லாபத்திற்காக மட்டுமே தமிழக அணி போல விளம்பரப்படுத்தி தமிழர்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறது. ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து அரசு எந்த பதிலும் இன்னும் அளிக்கவில்லை.

Tags : Chennai Super Kings ,Tamil Nadu ,BAMA ,MLA ,Venkateswaran ,Legislative Assembly ,CHENNAI ,BAMAKA ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...