×

சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்ட பழங்குடியின கொண்டா ரெட்டீஸ் மலைசாதி முன்னேற்ற சங்கம் சார்பில், சாதி சான்றிதழ் வழங்கக்கோரி திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு சங்க தலைவர் விஜயன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் அண்ணாமலை வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 200க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ‘’பள்ளி மாணவர்களுக்கு பழங்குடி கொண்டா ரெட்டீஸ் சாதி சான்றிதழ் உடனடியாக  வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மாநில கூர்நோக்கு குழுவின் சாதி மெய் தன்மைப்பேரிலும் எங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். அரசு வழங்கும் நலத்திட்டங்களை எங்கள் இனமக்களுக்கு வழங்க வேண்டும்’ என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை முழங்கினர்.இதுபற்றி அறிந்ததும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, ஏ.எஸ்.பி., சாய்பரணீத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடுத்த மனுவையும் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அந்த சமயத்தில் திடீரென கீளப்பூடி பகுதியை சேர்ந்த பெரியசாமி (80) என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பெரியசாமி நலமாக  இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்….

The post சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur District Tribal Kanda Reties Mountain Improvement Association ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...