×

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது.!

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோடைக்கால நீர்ப்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் எஸ்.கே.ஹல்தர் தலைமையில், டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, கோடைகால நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Caviri Water Management Commission ,S.C. ,K.K. Haldar ,Delhi ,S. K.K. Haltar ,Tamil Nadu ,Water ,Resources ,
× RELATED பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக...