×

சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை: நரிக்குறவர், குருவிக்காரர் நல பேரமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்:நரிக்குறவர் சமூகம் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக கூறி பெரம்பலூரில் அந்த சமூகத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கட்சி பாசறை கூட்டத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

மேலும் பல மேடைகளில் சீமான் தனது அவதூறு பேச்சை தொடர்ந்து வருவதாக கூறி பெரம்பலூரில் தமிழ்நாடு நரிக்குறவர், குருவிக்காரர் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீமான் தனது அவதூறு பேச்சை தொடர்ந்து தொடர்ந்தால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். ஏற்கனவே அருந்ததியினர் சமூகத்தை குறித்து சீமான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை: நரிக்குறவர், குருவிக்காரர் நல பேரமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Seaman ,Fox ,Perambalur ,Seeman ,Dinakaran ,
× RELATED புதிய வீடுகள் கட்டித்தர கலெக்டரிடம் கோரிக்கை