சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரில் விசாரணை நடத்தி வருகிறது. மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் குமார், சுந்தரேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுகள் நடப்பதால் இன்று விசாரணைக்கு வர வேண்டாம் என்று கலாஷேத்ரா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
The post சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.