×

திருமங்கலத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திருமங்கலம், ஏப். 11: திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் நகர திமுக சார்பில் திருமங்கலம் பஸ்ஸ்டாண்டில் நேற்று கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகத்தினை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பேசியதாவது, ‘முதல்வரின் உத்தரவுப்படி கோடைகாலம் முழுவதும் பொதுமக்களுக்கு தினசரி நீர் மோர் வழங்கப்படும். தமிழக மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் வகையில் நல்லாட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். பெண்களுக்கான இலவச பஸ், மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசின் நல்லாட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து அவர், பொதமக்களுக்கு தர்பூசணி, இளநீர், கொய்யா, திராட்சை, வாழை பழம், நுங்கு கனிகள், சர்பத், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவை தலைவர் நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான், நகர செயலாளர் தர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, மதன்குமார், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னசாமி, காசிபாண்டி, பெல்ட் முருகன், மங்களகவுரி, பிரதிநிதிகள் கோல்டன் தங்கபாண்டி, ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமங்கலத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ne Mor Pandal ,DMK ,Tirumangalam ,Thirumangalam ,President ,Chief Minister ,M.K.Stal ,Madurai South District ,City ,
× RELATED திருமங்கலத்தில் பேருந்து...