×

திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர், ஏப்.11: திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 20ம்தேதி திருவாரூர் ஆர்.டி.ஒ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கலெக்டர்அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோட்ட அளவிலும் விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மற்றும் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவாரூர் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் வருகிற 20ந் தேதி மாலை 4 மணியளவில் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஒ சங்கீதா தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேற்படி, கூட்டத்தில் திருவாரூர் கோட்ட அளவிலான முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,Tiruvarur RTO ,
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!