×

அவதூறாக பேசிய பழக்கடை உரிமையாளர் மீது புகார்

ஆண்டிபட்டி, ஏப். 11: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு கீழ் 300 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு முன்பு பழக்கடை வைத்து நடத்தி வரும் ஈஸ்வரன் என்பவர் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் பெண்களை அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று ஒருசில பெண்களை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அவதூறாக பேசிய பழக்கடை உரிமையாளர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Theni Government Medical College Hospital ,K.Vilakku ,Andipatti, Theni ,slander ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?