×

வழிப்பறி வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிவகாசி, ஏப்.11: சிவகாசி சாட்சியாபுரம் வி.எஸ்.கே.டி. நகரை சேர்ந்தவர் கண்மணி(38). இவர் 2017ல் காமராஜர் ரோட்டில் உள்ள தனது மெடிக்கல் கடையை பூட்டிவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த எட்டரை பவுன் தங்கச் செயின், கைப்பையை பறித்துவிட்டு தப்பினர். டவுன் போலீசார் விசாரித்து செயின் பறிப்பில் ஈடுபட்டதாக சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்த அழகுராஜா, மகேஸ்வரன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகாசி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ராஜேஷ் கண்ணன், நகை பறிப்பில் ஈடுபட்ட அழகுராஜாவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மகேஸ்வரன், முருகன் விடுதலை செய்யப்பட்டனர். அழகுராஜா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வழிப்பறி வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sathiyapuram ,VSKT ,Kanmani ,Kamaraj Road ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை