×

மீஞ்சூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் புதிய மின்மாற்றிகள்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகளை துரை சந்திரசேகர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம், நெய்தவாயல், நாலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் அதிக குடியிருப்பு இருப்பதால் மின்சாரம் கூடுதலாக உபயோகப்படுகிறது. இதனால் வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. இதனை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் மின்மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து மின் பகிர்மான வட்டம் தண்டையார்பேட்டை கோட்டம் மீஞ்சூர் உப கோட்டத்தில் உள்ள நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ4.25 லட்சம் மதிப்பீட்டிலும், நெய்த வாயல் ஊராட்சியில் புதுப்பேடு, ஐஸ்வர்யா நகர் பகுதியில் ரூ4.75 லட்சம் மதிப்பீட்டிலும், கே.ஆர்.பாளையம் கிராமத்தில் ரூ4.25 லட்சம் மதிப்பீட்டிலும், நாலூர் ஊராட்சியில் ரூ7 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் நான்கு இடங்களில் ரூ20.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றிப் அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ கலந்து கொண்டு 4 இடங்களில் உள்ள புதிய மின் மாற்றிகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் பாண்டியன், விஸ்வநாதன், சுரேஷ், சுகுமார் மற்றும் நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், வார்டு உறுப்பினர் தசரதன், நாலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ரகு, வார்டு உறுப்பினர்கள் அஸ்வின், சிவா, சுபஸ்ரீ திருணா, நாகப்பன், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதிநாகராஜ், வார்டு உறுப்பினர்கள் ரத்தினம் வரதராஜ், தினேஷ், வள்ளி விஸ்வநாதன், விக்னேஷ் மற்றும் மின்வாரிய துறை சார்ந்த ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் ஒன்றியத்தில் 4 இடங்களில் புதிய மின்மாற்றிகள்: துரை சந்திரசேகர் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Meenjoor Union ,Durai Chandrasekhar ,MLA ,Ponneri ,Meenjur Union.… ,Meenjur Union ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு