×

ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் தீ: டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர், தேவி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (40). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் குடும்பத்துடன் உத்தரகாண்ட்டுக்குச் சென்றுவிட்டார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் 2 வீடுகள் மற்றும் ஒரு கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பாலசுப்பிரமணியம் தங்கியிருந்த மேல்தள வீட்டின் பூட்டிக் கிடந்த ஒரு அறையில், நேற்று காலை 10.30 மணியளவில், திடீரென தீ பிடித்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், பாலசுப்ரமணியம் இதுகுறித்து ஆவடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதற்குள், தீ மளமளவென அறை முழுவதும் பரவி, வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி மற்றும் அம்பத்தூர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் தீ: டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன appeared first on Dinakaran.

Tags : Avadi ,Balasubramaniam ,Tiruvalluvar Street ,Devi Nagar, Annanur ,Uttarakhand, India ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...