×

திருவண்ணாமலை அருகே சோகம் 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று நர்ஸ் தற்கொலை

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே குடும்ப தகராறில் 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (36). கனலாபாடி கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சூர்யா (32), சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன்கள் லட்சன் (4), உதயன் (1). சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, சின்னராசு இரவு 10 மணியளவில் உறவினரது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நள்ளிரவு திரும்பியுள்ளார். அப்போது மனைவி மற்றும் 2 மகன்களையும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூர்யாவின் செல்போன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று அதிகாலை வந்து கிணற்றில் இறங்கி தேடினர். 3 மணி நேரத்துக்கு பிறகு சூர்யா, உதயன் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் தண்ணீர் முழுவதையும் மின்மோட்டார் மூலம் வெளியேற்றி 11 மணி நேரம் கழித்து லட்சன் சடலம் மீட்கப்பட்டது. குடும்ப தகராறில் சூர்யா தனது 2 மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.

  • 2 பெண் குழந்தைகளை கொன்று மனநலம் பாதித்த பெண்ணும் தற்கொலை
    விருதுநகர் அருகே குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மனைவி பெத்தம்மாள் (36). மகள்கள் பாண்டிச்செல்வி (6), கார்த்திகேயினி (3). பெத்தம்மாள் கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சரவணக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். பிற்பகல் 2 மணியளவில் பெத்தம்மாள் திடீரென 2 குழந்தைகளின் கழுத்தில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்க விட்டு கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சரவணக்குமார், 2 மகள்கள், மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுத அவர், ‘நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டினர், அவரை தடுத்து நிறுத்தினர். இது குறித்து ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post திருவண்ணாமலை அருகே சோகம் 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று நர்ஸ் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Kilibennathur ,Kilibennathal ,Tiruvannamalai ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...