×

கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்கல்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 3 படகுகள் ஏற்கனவே அரசுடைமையாக்கப்பட்டது. இந்த 3 படகுகளும் இலங்கை தமிழ் மீனவர் அமைப்புகளுக்கு வழங்கப்படும் என கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். அமைச்சரால் மூன்று மீனவர் அமைப்புக்கு வழங்கப்பட்ட படகில் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு முல்லைத்தீவு கொண்டு வரப்பட்டது. வந்த 3 நாட்களில் இந்த படகு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு முல்லைத்தீவு கடலில் மூழ்கடிக்கப்பட்டது. மற்ற 2 படகுகளில் ஒன்று, இலங்கை குருநகர் மீனவர் அமைப்புக்கு வழங்கப்பட்டது. இப்படகு 2 நாட்களுக்கு முன்பு குருநகர் பகுதியை வந்தடைந்தது. ஆனால், அதே நேரத்தில் மூன்றாவதாக வழங்கப்பட்ட தமிழக மீனவரின் படகு தங்களுக்கு வேண்டாம் என இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Sri Lankan Navy ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்