×

மதுராந்தகத்தில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்: குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

மதுராந்தகம்: குன்னூர் மலைப்பாதையில் மதுராந்தகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியாகினர். நீலகிரி மாவட்டத்திற்கு செங்கல்பட்டு மாவடடம் மதுராந்தகத்தை சேர்ந்த செந்தில் (48), பூவானம் (35), சம்பத் (40), இவரது மனைவி சத்யா (35), அருணகிரி (55) (திருமண தரகர்) ஆகியோர் 2 நாள் முன்பு காரில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து ஊட்டியில் இருந்து மதுராந்தகம் நோக்கி கார் புறப்பட்டது. காரை செந்தில் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் குன்னூர்‌-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து குன்னூர் தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் உதவியுடன் காரில் இருந்த 5 பேரையும் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா மற்றும் அருணகிரி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post மதுராந்தகத்தில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்: குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Coonoor hill ,Madhurandhakam ,Coonoor mountain pass ,
× RELATED அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம்...