×

ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சைதை தேரடியில் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டம்: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சைதை தேரடி திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வரும் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர் ஆன்லைன் மீதான தடைச் சட்டத்திற்கு’ ஒப்புதல் அளித்துள்ளார். இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி.

எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஸ்டெர்லைட் பிரச்னைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் – விளக்கமும் அளிக்காத காரணத்தினால் வரும் 12ம் தேதியன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை தேரடித் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக சைதை தேரடியில் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டம்: திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Governor's ,House ,Saidai Theradi ,DMK alliance ,Chennai ,Secular Progressive Alliance ,Saidai ,Governor's House ,DMK alliance party ,Dinakaran ,
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...