×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருதினை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், கலெக்டர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களிடமிருந்து 290 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22ம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினையும், மேலும், ஆப்த மித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்து கால மீட்புக்குழு உபகரணங்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித், மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மணிமேகலை விருது: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Aarti ,Kanchipuram ,People's Grievance Day ,Manimegalai ,Arthi ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி; அதிமுகவை பிளவுபடுத்துவேனா?