×

சூதாடிய 6 பேர் கைது

அருப்புக்கோட்டை, ஏப். 10: அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது வெள்ளைக்கோட்டை வடம்போக்கித்தெருவில் 6 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வெள்ளைக்கோட்டையைச் சேர்ந்த அருண்குமார் (31), சோலையப்பன் (41), கீழத்தெரு ரமேஷ்(52), திருச்சுழி சேதுபுரம் ரூபன் (41), அன்புநகர் ஆறுமுகம்(40), சிக்கந்தர் பாதுஷா(35) ஆகியோரைபோலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Aruppakottai ,Aruppukkottai Nagar ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...