×

வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்பட்ட ஆகாயத் தாமரை செடியில் இயற்கை உரம் தயாரிப்பு

மன்னார்குடி: வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்பட்ட ஆகாயத் தாமரை செடியில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பு பணியை சோதனை முயற்சியாக வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் உள்ள ஏரியில் பாது காக்கப்பட்ட பறவைகள் சரணால யம் உள்ளது. 316 ஏக்கர் பரப்பளவு கொ ண்ட பிரமாண்டமான இந்த ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கடந்த பிப்ரவரி 18-ந் தேதி அகற்றினர். பின்பு, திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் தொழிலாளர்களைக் கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்தினர்.

பல இடங்களில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி கரையில் குவித்து வைத்து பின்னர் தீ வைத்து எரித்து விடுவர். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கானதாக இருந்தது. காற்றும் மாசுப்பட்டு வந்தது. இதை தவிர்க்க, திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் டாக்டர் அறிவொளி, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு ஆகியோர் ஆகாயத் தாமரை செடிகளை இயற்கை உரமாக மாற்றி, அதனை மரக்கன்றுகளை வளர் க்க பயன்படுத்தலாம் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டனர். இயற்கை உரம் தயாரிப்பதற்காக வடுவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அரை ஆழம், 50 அடி நீளம், 30 அடி அகலத்தில் குழி வெட்டப்பட்டு அதில் ஆகாயத்தாமரை செடிகளை நிரப்பி இயற்கை உரமாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சுற்றுச்சுழல் ஆர்வலர் ராஜவேலு கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர் ந்து வருகிறது. இது நாளடைவில் நீர்நிலைகளை தூர்ந்து போக செய்து விடு கிறது. இதனை தவிர்கவே வடுவூர் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அக ற்ற திருவாரூர் மாவட்ட வனத்துறையுடன் இணைந்து இப்பணியை மேற் கொண்டோம். தொடர்ந்து அவற்றை இயற்கை உரமாக மாற்றும் பணியை செய்து வருகிறோம். டபிள்யு டி சி எனப்படும் வேஸ்ட் டி கம்போஸ் ஜெல், நாட்டு சர்க்கரை இரண் டையும் நீருடன் சேர்த்து திரவம் தயார் செய்து ஆகாயத்தாமரை செடிகளில் தெளித்து வருகிறோம். இதில் தேங்காய் நார் கழிவு சேர்க்கப்பட்டு படுதா கொ ண்டு மூடி வைத்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் மீண்டும் கிளறி விட்டு கரைசல் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. 45 நாள் முடிவில் இயற்கை உரம் கிடைக்கும். இதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படை க்க இருக்கின்றோம் என்றார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட வனத்துறை அலுவலர் டாக்டர் அறிவொளி கூறுகையில், வடுவூர் ஏரியில் அகற்றிய ஆகாயத்தாமரை செடி களை இயற்கை உரமாக்கும் பணியை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த இயற்கை உரம் விற்பனை நோக்கில் உற்பத்தி செய்யப் படவில்லை. ஒரு சோதனை முயற்சியாக இதனை செய்து வருகிறோம். இந்த இயற்கை உரத்தினை மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய பயன்படுத்த இருக்கிறோம் என்றார்.

The post வடுவூர் ஏரியில் இருந்து அகற்றப்பட்ட ஆகாயத் தாமரை செடியில் இயற்கை உரம் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vaduvur lake ,Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!