ஓசூர்: ஓசூர் மாநகர திமுக சார்பில், ஓசூர் உழவர் சந்தை அருகில் நேற்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநகர மேயர் சத்யா தலைமை வகித்தார். மாநகர அவைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், தர்பூசணி, மோர் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் விஜயகுமார், தனலட்சுமி, சீனிவாசன், ரவிக்குமார், சாந்தி, துணை மேயர் ஆனந்தய்யா, ராமு, ரவி, காந்திமதி கண்ணன், மாதேஸ்வரன், சென்னீரப்பா, சீனிவாசன், மாதேஷ், தினேஷ், சுமன், காலேஷா, மோசின் தாஜ் நிசார் மற்றும் மகேஷ்பாபு, கௌரி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஓசூரில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.