×

கணவனை தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது

சென்னை: ராயப்பேட்டையில் கணவனை தற்கொலைக்கு தூண்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை, முகமது உசேன் சந்து பகுதியை சேர்ந்தவர் வித்தியகுமார் (34), சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிஷா (32) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நிஷாவின் சகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோர், வித்தியகுமாரின் வீட்டில் தங்கினர். இவர்கள், நீண்ட நாட்கள் தங்கி இருந்ததால் வித்தியகுமார் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நிஷா அவரது உறவினர்களுடன் சேர்ந்து வித்தியகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கணவர் தன்னை அடித்து கொடுமைப் படுத்துவதாக திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிஷா புகார் அளித்துள்ளார்.அதன்பேரில், போலீசார் வித்தியகுமார் மற்றும் அவரது பெற்றோரை விசாரணைக்காக அழைத்து திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வித்தியகுமார், கடந்த 5ம் தேதி தனது எலக்ட்ரிக் பொருட்கள் வைக்கும் குடோனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது செல்பானில் வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அதில், எனது சாவிற்கு காரணம் தனது மனைவி நிஷா, மனைவின் சகோதரி உஷா மற்றும் அவரது கணவர் கண்ணன் ஆகியோர் தான், என பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட வித்தியகுமார் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஜாம்பஜார் போலீசார், வித்தியகுமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி நிஷா மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர்….

The post கணவனை தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rayapetta ,Mohammad Hussain ,Sandhu ,Dinakaran ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்