×

காளை முட்டி வாலிபர் பலி

வேலூர்: வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (30), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மஞ்சுளா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில் நடந்த மாடு விடும் விழாவை காண ஏழுமலை சென்றிருந்தார். அப்போது ஒரு காளை திடீரென ஏழுமலையை முட்டியது.

இதில் மார்பு, கழுத்துப்பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி ரத்தம் கொட்டியது. மயங்கி விழுந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post காளை முட்டி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Yemumalai ,Vishdachipuram ,Manjula ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...