திருச்சி: கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. இதில் வந்து இறங்கிய பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகத்தின் பேரில் பெண் பயணி ஒருவரிடம் உடமைகளை சோதனை செய்தபோது, அவர் உள்ளாடை மற்றும் பர்சிற்குள் 623 கிராம் தங்கம் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 37 லட்சத்து 97 ஆயிரத்து 604 என தெரிய வந்தது.
இதேபோல், துபாய் தலைநகர் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளையும் வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில், ஒரு ஆண் பயணி ஆசனவாய் வழியாக பசைவடிவிலான 306.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 18 லட்சத்து 79ஆயிரத்து 458 . இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
The post திருச்சி ஏர்போர்ட்டில் ரூ. 56 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.