- பிரகாஷ்ராம்
- பிஎல்ஏ
- ஜெகநாத் மிஸ்ரா
- உத்தம்பாளையம்
- ராயப்பன்பட்டி
- தேசிய செட்டியார் சங்கம்
- பாலமுத்தழகு குழு
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி தொழிலதிபர் அதிசயம் மறைவிற்கு தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவரும், பாலமுத்தழகு குழும சேர்மனுமான பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: தேனி மாவட்டத்தில் உழைப்பிற்கு முன்னுதாரனமாக திகழ்ந்தவர். தனது இறுதி காலம் வரை தேனியைப் போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து உழைப்பிற்கு முன் உதாரணமாக வாழ்ந்ததோடு மட்டும் அல்லாமல், எளிமையான வாழ்வினால், எல்லா தரப்பு மக்களின் மிகப்பெரிய அபிமானத்தை பெற்று விளங்கினார். பண்பு மாறா குணமும் அன்பு செலுத்துவதில், எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். கிராமப்பகுதியான ராயப்பன்பட்டியில், ஜெனிஸ் குழுமம் ஆரம்பித்து இன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தவர். இவர் மூலமாக வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்தி உழைப்பிற்கு ஊக்குவித்தவராக திகழ்ந்தார். ராயப்பன்பட்டி தொழிலதிபர் அதிசயத்தின் கம்பம் பள்ளதாக்கில் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தொழிலதிபர் அதிசயம் மறைவு பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா இரங்கல் appeared first on Dinakaran.