×

காவல் குறைதீர் கூட்டத்தில் 33 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏஎஸ்பி ஸ்டாலின் தகவல்

காரைக்குடி: காரைக்குடி துணைகண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி செல்வராஜ் அறிவுறுத்தலின்படி குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமை வகித்தார். உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான 44 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 33 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. ஏஎஸ்பி ஸ்டாலின் கூறுகையில், குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மக்கள் வழங்கிய மனுக்களில் 33 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தினசரி மனுக்கள் பெறப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறை சம்மந்தப்பட்ட எந்த குறையாக இருந்தாலும் நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்றார்.

The post காவல் குறைதீர் கூட்டத்தில் 33 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏஎஸ்பி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : ASP Staal ,Karaikudi ,SB ,Selvaraj ,ASP ,Stalin ,Utkotam ,ASP Stall ,Dinakaran ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்