×

மாஜி ராணுவவீரர் மர்மச்சாவு

நாமக்கல், ஏப்.9: நாமக்கல் ஆர்டிஓ முகாம் அலுவலகம் அருகில், திருவண்ணாமலையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்து சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சாலை டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (54). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், நாமக்கல்லில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று, நாமக்கல் ஆர்டிஓ., முகாம் அலுவலக சுற்றுச்சுவர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீசார், முருகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன் தர்ஷன்குமார் நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post மாஜி ராணுவ
வீரர் மர்மச்சாவு
appeared first on Dinakaran.

Tags : Marmachau ,Namakkal ,Namakkal RTO ,Thiruvannamalai ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...