- கிருஷ்ணகிரி
- வில்லுப்புரம் மண்டல கனிமச் சேர்மம்
- விஜயலட்சுமி
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- பார்கூர் பசவன்னக்கோயில் சாலை
- தின மலர்
கிருஷ்ணகிரி, ஏப்.9: விழுப்புரம் மண்டல கனிம இணை இயக்குனர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பசவண்ணகோயில் சாலை, மேல்கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் கருங்கற்கள் இருப்பது தெரிந்தது. மேலும், குருவிநாயனப்பள்ளியில் இருந்து பர்கூருக்கு கருங்கற்களை கடத்தி வந்திருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கந்திகுப்பம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து லாரியின் டிரைவர், உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதே குழுவினர் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் சோதனை செய்தபோது அங்கு கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது அதில் 6 யூனிட் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பாகலூர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து எஸ்ஐ கனிமொழி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். கிருஷ்ணகிரி ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மூங்கில்புதூர் பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, அதில் எண்ணெகோல்புதூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கருங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான டிரைவர்கள், உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கருங்கற்கள் கடத்திய 3 லாரி பறிமுதல் appeared first on Dinakaran.