×

சிங்கப்பூர் மாலில் இருந்து தள்ளிவிட்டு இந்தியர் கொலை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வந்தவர் தேவேந்திரன் சண்முகம்(34). இவர் கடந்த மாதம் ஆர்சர்ட் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்குள்ள படிக்கட்டில் செல்லும்போது முகமது அஸ்கரி அப்துல் காஹா(27) என்பவருடன் எதிர்பாராதவிதமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முகமது அஸ்கரி தேவேந்திரனை தள்ளியதாக தெரிகிறது. படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார். அவரது உடல் மாண்டாய் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிங்கப்பூர் மாலில் இருந்து தள்ளிவிட்டு இந்தியர் கொலை appeared first on Dinakaran.

Tags : Singapore mall ,Singapore ,Devendran Shanmugam ,orchard road ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...