- மாஸ்க்
- புதுச்சேரி
- ஆட்சியாளர் வல்லவன்
- புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- கொரோனா
- மாஸ்க் பூஞ்சைக்காளான்
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_33293055/thumb.jpg)
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வல்லவன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: புதுச்சேரியில் நடக்கும் கொரோனா பரிசோதனையில் நோய் தொற்று இருக்க கூடிய நபர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைத்து பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கொரோனோ விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு வரும் 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும்’ என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார். முன்னதாக வரும் 24ம் தேதி வரை 28ம் தேதி தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
The post புதுச்சேரியில் மாஸ்க் கட்டாயம் appeared first on Dinakaran.