×

சாதிவாரி கணக்கெடுப்பு பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

அவனியாபுரம்: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களின் சேதமடைந்த விடுதிகளை பழுது பார்ப்பதற்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பொதுப்பணித்துறை மூலம் அந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கட்டிடம் கட்ட தனியாக இன்ஜினியரிங் பிரிவு இருப்பதுபோல் பிறப்படுத்தப்பட்டோர் துறைக்கும் வேண்டும் என கேட்டுள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்புக்கான ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அவர் தரப்பில் பணிகளை முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajaganappan ,Avaniyapuram ,Tamil Nadu ,Madurai Airport ,Dinakaran ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...