×

பிரதமர் மோடி நாளை முதுமலை வருகை ஆஸ்கர் பாகன் தம்பதிக்கு போலீஸ் பாதுகப்பு

ஊட்டி: பிரதமர் மோடி வருகையையொட்டி ஆஸ்கர் பாகன் தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நாளை காலை 9.30 மணிக்கு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார். அங்கு புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படத்தில் இடம் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

இதனால், பாகன் தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 4 போலீசார் அவர்களுடன் பாதுகாப்பிற்கு உள்ளனர். பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் நடக்கும் பிராஜக்ட் டைகர் 50வது ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பந்திப்பூர் புலிகள் காப்பக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், முதுமலையில் நடக்கும் விழாவில் சில முக்கிய அறிவிப்புக்களை வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post பிரதமர் மோடி நாளை முதுமலை வருகை ஆஸ்கர் பாகன் தம்பதிக்கு போலீஸ் பாதுகப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Mudumalai ,Oscar Bagan ,Chennai ,Nilgiris ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...