×

பிரதமர், உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்: பள்ளி மாணவன் கைது

நொய்டா: பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு தனியார் டிவி சேனலுக்கு மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இது குறித்து கடந்த 5ம் தேதி செக்டார்20 போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த போலீசார் விசாரணையில் லக்னோவின் சின்ஹாட் பகுதியில் இருந்து கடிதம் வந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் பீகாரை சேர்ந்த 16வயது சிறுவனை நேற்று காலை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post பிரதமர், உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்: பள்ளி மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Modi ,Uttar ,Pradesh ,Chief Minister ,Yogi Adityanath ,U.P. ,
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...