- கும்பல்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கொடி
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- எஸ்சி துறை
- எம் ஜி பி ரஞ்சன்குமார்
- பாராளுமன்ற
- தின மலர்
சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: பாராளுமன்றத்தில் தொடர் கேள்விகளை எழுப்பிய தலைவர் ராகுல் காந்தியை எதிர்கொள்ள முடியாமல் சூரத் நீதிமன்ற அவதூறு வழக்கின் மூலம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் இருக்கும் போதே அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்து ஜனநாயகத்தை அதல பாதாளத்தில் குழிதோண்டி புதைத்திருக்கிறார் பிரதமர்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை (முதல்பகுதி) திறந்து வைக்க வரும் பிரதமர் மோடியை கண்டித்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை முடிவு எடுத்துள்ளது.
இதில், காங்கிரஸ் பேரியக்க முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். ஆர்ப்பாட்டம் மூலம் இந்திய மக்கள், தமிழக மக்களை வஞ்சித்து வரும் பிரதமருக்கு எதிர்ப்பை பதிவு செய்வது மட்டுமல்லாமல், ராகுல் காந்தி மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அன்பையும், ஆதரவையும் உணர்த்தும் விதத்திலும் போராட்டம் வெற்றிபெற வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post பிரதமர் தமிழகம் வருகையை கண்டித்து சென்னையில் நாளை காங். கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.