×

விராலிமலையில் புதர்மண்டி கிடக்கும் கால்நடைகள் அடைக்கும் பட்டி: இடித்து புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை

விராலிமலை: விராலிமலை காவல்நிலையம் அருகே செயல்பாடற்று புதர் மண்டி கிடக்கும் கால்நடை அடைக்கும் பட்டியின் (பவுண்டு) கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளையும், வயல்வெளியை சேதப்படுத்தும் ஆடுகளை பட்டியில் அடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலை பகுதி முக்கிய சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விராலிமலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் இடம் பெற்றுள்ளன. அதனால் இச்சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் கடைவீதி, காமராஜர் நகர், செக்போஸ்ட், வட்க்குரத வீதி, மணவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வருகின்றன.

வாகனங்கள் செல்ல வேண்டிய சாலைகளில் ஆடு, மாடுகள் பெருமளவில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி கை,கால்கள் முறிந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலையின் நடுவே கூட்டம் கூட்டமாக படுத்து உறங்கும் மாடுகள் கண்ணுக்கு தெரியாததால், டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. முன்னர், ஊராட்சி நிர்வாகம் சாலைகளில் நடமாடும் கால்நடைகளை பிடித்து பட்டிகளில் அடைத்து வைத்து அபராதம் விதித்து சாலைகளில் சுற்றித் திரிய விடக்கூடாது என்று கால்நடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தது. ஆனால் அந்த நிலை தற்போது முற்றிலும் செயல்பாட்டில் இல்லை.

இந்த நிலையில் பயன்பாடற்று கிடக்கும் பட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பாரபட்சம் பாராமல் சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைத்து விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாலடைந்து கிட்க்கும் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி திறந்தவெளி பகுதியாக்கி விஷ ஜந்துக்கல் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்று அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விராலிமலையில் புதர்மண்டி கிடக்கும் கால்நடைகள் அடைக்கும் பட்டி: இடித்து புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Viralimalaya Sushmani ,Packs Bar ,Viralimalai ,Viralimalai Police Station ,Freshmani ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி