×

உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவர் பொது வெளியில் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அழகல்ல: ஆளுநர் ரவி-க்கு அதிமுக கண்டனம்

சென்னை: உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அழகல்ல என்று கே.பி.முனுசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில் அதிமுகவும் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது வேதனை அளிக்கிறது என்று கே.பி.முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

The post உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவர் பொது வெளியில் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது அழகல்ல: ஆளுநர் ரவி-க்கு அதிமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravie ,Chennai ,K.K. ,GP ,Munusamy ,
× RELATED 6 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும்