கும்பகோணம், ஏப்.7: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதி, பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர், ஓலைப்பாடி, கொந்தகை ஆகிய ஊராட்சிகளில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாநில அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன்,
ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் ஹாஜாமைதீன், முருகேசன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கலந்து கொண்டு திமுகவில் புதிதாக சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்ததற்கான படிவங்களை பெற்றுக்கொண்டார். முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆதனூர் கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பிரசாத் நன்றி கூறினார்.
The post கபிஸ்தலம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.