×

கல்லணை அருகே அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.7: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலத்தில் அரசு பேருந்து நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை வழிமறித்த ஒருவர் முன் கண்ணாடியை கட்டையால் தாக்கி உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என்று பேருந்து நடத்துனர் திருஞானசம்பந்தத்தை மிரட்டி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தோகூர் போலீசார் செய்யாமங்கலம் பிரதான சாலையை சேர்ந்த லஷ்மணன் மகன் சஞ்சீவி (32) என்பவரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கல்லணை அருகே அரசு பஸ் கண்ணாடியை சேதப்படுத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kallanai ,Thirukkatupalli ,Seimamangalam ,Kallani ,Thanjavur district ,
× RELATED திருவெறும்பூர் அருகே வாகன விபத்தில் 4 பேர் காயம்