×

மணமேல்குடி அருகே மூதாட்டியை அடித்து கொன்றது யார்?

புதுக்கோட்டை,ஏப்.7: மண மேல்குடி கோடியக்கரை பகுதியில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தை சேர்ந்த காரைக்கோட்டை கோழிச்சனத்தை சேர்ந்த சுலோச்சனா (60). இவர் கடந்த 1ம் தேதி முதல் காணவில்லை. இதனை அடுத்து அவருடைய மகள் விந்தியா மனமேல்குடி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் கோடியக்கரை பகுதியில் பெண் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது, அது சுலோச்சனாவின் சடலம் என உறுதி செய்யப்பட்டது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, கத்திக்குத்து காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சுலோச்சனா உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கோடியக்கரை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், சுலோக்சனாவின் கணவர் இறந்த பிறகு அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ் (55) என்ற வீரபெருமாளுடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். சுலோச்சனாவை, ரமேஷ் சந்திக்கும்போது பணமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் சுலோக்சனாவை போனில் தொடர்பு கொண்ட சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி வரவைத்துள்ளார். இதனையடுத்து ராமேஷ்யை பார்க்க சுலோக்சனா வந்துள்ளார். பின்னர் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றுள்ளனர். படகை செந்தில்குமார்(27) ஓட்டியுள்ளார். படகில் சென்றபோது ரமேசுக்கும், சுலோக்சனாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியபோது ரமேஷ் படகில் இருந்த கட்டையை எடுத்து சுலோச்சனாவை தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் கரை பகுதிக்கு வந்து கிழே இறக்கி கத்தியால் சுலோச்சனாவை ரமேஷ் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சுலோக்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரியவந்தது. இதில் தொடர்புடைய போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ரமேஷ்யை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மணமேல்குடி அருகே மூதாட்டியை அடித்து கொன்றது யார்? appeared first on Dinakaran.

Tags : Mamelkudi ,Pudukottai ,Kodiakkarai ,Mana Melkudi ,Mamelgudi ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...